search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேதமடைந்த அரசு பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்
    X

    அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த நிலையில் இருப்பதை படத்தில் காணலாம்.

    சேதமடைந்த அரசு பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்

    • கமுதி அடுத்துள்ள பேரை யூரில் சேதமடைந்த அரசு பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.
    • சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பேரை யூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி வளாகத்தில் கால்நடைகள் மேய்ச்சலுக்காக சுற்றி திரிந்ததாலும், சமூக விரோதிகள் பயன்படுத்த தொடங்கியதாலும் பாதுகாப்பு கருதி 10 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டது.இந்த நிலையில் தற்போது பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்து ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதையொட்டி பேரையூர் வழியாக செல்லும் குண்டாறு கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் சாலையோர கால்வாய்கள் மூலம் பள்ளி வளாகத் திற்குள் மழை நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் மழைக்காலங்க ளில் வரத்துக்கால்வாய்க ளில் தேங்கும் மழைநீர் மூலம் விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் நுழையும் ஆபத்து உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இடிந்து உள்ள தால் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தை பயன் படுத்த தொடங்கலாம்.

    எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×