என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பரமக்குடியில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு
- பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- பரமக்குடி நகா் முழுதும் 70 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அஞ்சலி செலுத்துவோரின் நலனுக்காக பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
அதன்படி விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அரசு சாா்பில் பரமக்குடி நகா் முழுதும் 70 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. காவல் துறை சாா்பில் பரமக்குடி நகா் மற்றும் சுற்றுப்புறங்களில் 75 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு மேற்கொ ள்ளப்படும்.
பரமக்குடி நகா் முழு வதும் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் கண்காணிப்பதற்கு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. பரமக்குடியில் உள்ள இமானுவேல்சேகரன் நினைவிடம் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா். 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்