search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • மிளகாய், பருத்தி, உளுந்து பயிர்களுக்கு இந்த மழை போதுமானதாக உள்ளது என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் நெல், மிளகாய், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு தற்போது களை எடுப்பு, பூச்சிமருந்து தெளிக்கும் பணி, உரமிடுதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. சில நாட்களாக போதிய மழை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் மாண்டஸ் புயலால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும். பரவலாக மழை பெய்தது. அபிராமம் பகுதியிலும், ஒரளவுக்கு மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அபிராமம் விவசாயிகள் கூறுகையில், அபிராமம், அதை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த ஆண்டு பருவமழை இல்லாததால், மிகவும் சிரமப்பட்ட நிலையில் நெல், பருத்தி, மிளகாய், உளுந்து பயிர்கள் கருகும் நிலைக்கு வந்துவிட்டது.

    இந்த நிலையில் மாண்டஸ் புயலால் அபிராமம் பகுதி யில் ஒரளவுக்கு பெய்த மழையால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டாலும் மிளகாய், பருத்தி, உளுந்து பயிர்களுக்கு இந்த மழை போதுமானதாக உள்ளது. இந்த மழையால் பண்ணையில் உள்ள மிளகாய் நாற்றுகளை வயலில் நடுவதற்கும் மிளகாய் கன்றுகள் நன்றாக வளருவதற்கும் இந்த மழை போதுமானதாக உள்ளது என்றனர்.

    Next Story
    ×