என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
ராமநாதபுரத்தில் உண்ணாவிரத போராட்டம்
By
மாலை மலர்23 Aug 2023 12:33 PM IST

- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பஞ்சாலை ஓய்வூதியர்கள் உண்ணாவிர போராட்டம் நடத்தினர்.
- உயர் பென்ஷன் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக பஞ்சாலை ஓய்வூதியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். சிவசாமி முன்னிலை வகித்தார்.சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி பேசினார். மின் ஊழியர் ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திர பாபு வாழ்த்தி பேசினார். ஓய்வு பெற்றோர் நல சங்க பஞ்சாலை மாவட்ட செயலாளர்.வெங்கடசுப்பிரமணியன் போராட்டத்தை முடித்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இதில், குறைந்தபட்ச பென்ஷன் ரூ. 9 ஆயிரம் பஞ்சபடியுடன் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட வந்த ெரயில்வே கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி உயர் உயர் பென்ஷன் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
Next Story
×
X