search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை விழிப்புணர்வு முகாம்
    X

    கால்நடை விழிப்புணர்வு முகாம்

    • ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • சிறந்த முறையில் கால்நடைகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியதில் உள்ள கிழவனேரி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பரமக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் சிவகுமார், கிழவனேரி பஞ்சாயத்து தலைவர் ராமலட்சுமி, துணைத்தலைவர் கார்த்திக், உதவி மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, மோகன், ஆய்வாளர் வீரன் மற்றும் கால்நடை உதவியாளர்கள் செந்தில்வேல், விஜயராணி கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் 105 விவசாயிகள் பயனடைந்தனர். 116 மாடுகளுக்கும், 416 வெள்ளாடுகளுக்கும், 524 செம்மறியாடுகளுக்கும், 16 நாய்களுக்கும், 286 கோழிகளுக்கும் சிகிச்சை தரப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×