search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோடி போட்டியிட வேண்டும்-பா.ஜ.க. நிர்வாகி பேச்சு
    X

    மோடி போட்டியிட வேண்டும்-பா.ஜ.க. நிர்வாகி பேச்சு

    • ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க. நிர்வாகி கருப்பு முருகானந்தம் பேசினார்.
    • கூட்டு முயற்சியால் மட்டுமே தேர்தலில் வெற்றியடைய முடியும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தலைவர் தரணி முருகேசன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுச்செய லாளரும், கோட்ட அமைப் பாளருமான கருப்பு முருகா னந்தம் பேசியதா வது:-

    தனி நபருக்காக பாரதீய ஜனதா கட்சி இல்லை. இது மிகப்பெரிய கட்சி. தேர்தலில் கட்சி வெற்றி பெற எந்த மாற்றமும் நடக்கும். வருகிற பாராளு மன்ற தேர்தலில் ராமநாத புரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பிரதமர் போட்டியிட வேண்டும் என்று தமிழக நிர்வாகிகள் வற்புறுத்தி இருக்கிறோம். இந்த கோரிக்கை நிறைவேறினால் ராமநாதபுரம் தொகுதி மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.

    கட்சி நிர்வாகிகள் கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு முயற்சி யால் மட்டுமே தேர்தலில் வெற்றியடைய முடியும். எனவே ஒவ்வொரு தொண்டனின் பணியும் முக்கியமானது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்யும் வகையில் நமது பணி இருக்க வேண்டும். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுப.நாகராஜன், மாவட்ட பார்வை யாளர் முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.முருகன்,மாநில மகளிர் அணி துணைத்தலைவி கலா ராணி, செயலாளர் மற்றும் மாநில பொறுப்பா ளர்கள் மாநில பொறுப்பா ளர்கள் பிரவீன் ஜி, ராமச்சந்திரன்,ரஜினிகாந்த் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்மா கார்த்திக், மணி மாறன், பவர் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×