என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை
- தேசிய கராத்தே போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- இவர்களுடன் சோகாய் கராத்தே தோ பள்ளியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், ஷிராமல் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் நிறுவனர் தில்லை பிரகாஷ் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தேசிய அளவிலான கராத்தே மற்றும் குங்பூ போட்டிகள் நடந்தன. இதில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சோகாய் கராத்தே தோ பள்ளியை சேர்ந்த ராமநாதபுரம் மாணவர்கள் கட்டா மற்றும் ஷாய் பிரிவுகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
சென்சாய் விமல சண்முகவேல் மேற்பார்வையில் பயிலும் ராமநாதபுரம் ஷ்ரமல் அகாடமி மாணவர்கள் மற்றும் உச்சிப்புளியை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை வென்றனர். குமிதே பிரிவில் பிரசன்னா, கருனேஷ் கார்த்திகேயன், மிர்திக்கா, ஜெயஜீத், அக்ஷிதா, கட்டா பிரிவில் பிரசன்னா, மிர்திக்கா தங்க பதக்கமும், ஷ்ரவன், பிரிதம், யோகேஷ் மகிபாலன், ஸ்ரீஹரன், நுதர்ஷன், முவிஸ் குமார், ஹரி பிரனவ், பிரஜீத், கருனேஸ் கார்த்திகேயன் ஆகியோர் வெள்ளி பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இவர்களுடன் சோகாய் கராத்தே தோ பள்ளியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், ஷிராமல் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் நிறுவனர் தில்லை பிரகாஷ் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்