search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திரவ உயிர் உரங்களை சாகுபடிக்கு பயன்படுத்துங்கள்-வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
    X

    திரவ உயிர் உரங்களை சாகுபடிக்கு பயன்படுத்துங்கள்-வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை

    • திரவ உயிர் உரங்களை சாகுபடிக்கு பயன்படுத்துங்கள் என்று வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை கூறினார்.
    • நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் உயிர் உர உற்பத்தி மையத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம், உயிர் உர உற்பத்தி மையத்தில் நடப்பு ஆண்டு (2022-23) 137 மெட்ரிக் டன் திட உயிர் உரங்கள் மற்றும் 55,000 லிட்டர் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இம்மையத்தில், அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதரம்), ரைசோபியம் (பயறு), ரைசோபியம் (நிலக்கடலை), பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, அசோபாஸ் (நெல்), அசோபாஸ் (இதரம்) போன்ற உயிர் உரங்கள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் தற்போது சாகுபடி செய்துள்ள நெல், பருத்தி, எள், மிளகாய் போன்ற அனைத்து பயிர் களுக்கும் திரவ உயிர் உரங்களை விதை நேர்த்தி, மண்ணில் இடுதல் மூலமாக பயன்படுத்தி மண்வளம் காத்து, அதிக மகசூல் பெற்றிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராமநாதபுரம் வேளாண்மை உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணன், மூத்த வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×