என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிக்கெட் எடுக்க ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைப்பு
- அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது
- நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, திரு வள்ளூர், செங்கல்பட்டு, காட்பாடி மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், பல மாநிலங்களுக்கும் அதிக அளவில் பயணிகள் செல்கின்றனர்.
இதனால் அலுவலக நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் பயணிகள் கூட்ட நெரிசல் அதிக மாக இருந்து வருகிறது. இதன் காரணமாக டிக்கெட் கவுண்ட் டர்களில் டிக்கெட் எடுப்பதில் நெரிசல் ஏற்பட்டு பயணிகளி டையே அவ்வப்போது சண்டைகள் ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் விதமாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் நிரந்தர தடுப்பை அமைத்துள்ளனர்.
டிக்கெட் கவுண்ட்டர் முன்பு பயணிகள் வரிசையாக வந்து டிக்கெட் எடுக்கும் வகையில் ஸ்டீல் கம்பிகளை கொண்டு ரெயில் நிலையம் அருகே உள்ள இரட்டை கண் பாலத்தில், ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் பழனிபேட்டை பகுதியில் இருந்து ரெயில் நிலையம், பஜார் மற்றும் பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள், மோட்டார் சைக்கிளில் வருபவர்களும் பாலத் தில் தேங்கி நிற்கும் நீரால் விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.
எனவே, இதனை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு ரெயில்வே துறை தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.






