என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு ரேசன் கடை பணியாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்
சேலம்:
தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கணேசன் கூறியதாவது:
பொது வினியோக திட்டத்துக்கு தனிதுறை தேவை. நிறுத்தி வைக்கப்பட்ட 17சதவீத அகவிலைப்படி வழங்குவதோடு அரசு ஊழியர்களை போன்று 31சதவீத அகவிலைப்படி வேண்டும்.
ரேஷன் பொருட்களை சரியான எடையில் வழங்க, அதை பொட்டலமாக வினியோகித்தல் என்பன உள்பட 11அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 7-ந் தேதி முதல், 9-ந் தேதி வரை தொடர் வேலை நிறுத்தம் செய்கிறோம். அத்துடன் மாவட்ட தலைநகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம். வரும் 10ந் தேதி தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். இதனால், நாளை முதல் 9-ந் தேதி வரை ரேஷன் மூடப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநகர செயலாளர் கார்த்திக், மாவட்ட பொருளாளர் ராஜி, மாவட்ட துணைத்தலைவர் நாகேந்திரன் உடன் இருந்தனர். மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






