என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே இடப்பிரச்சினையில் உறவினர்கள் மோதல்; தாய்- மகள் உட்பட 4 பேர் காயம்
- முத்து கிருஷ்ணனுக்கும் அவரது தம்பி நாராயண பெருமாளுக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது.
- காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சத்திரன்குடியிருப்பை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். விவசாயி. இவருக்கும் இவரது தம்பி நாராயண பெருமாளுக்கும் (வயது 45) இடப்பிரச்சினை இருந்து வருகிறது.
உறவினர்கள் மோதல்
இந்நிலையில் சம்பவத் தன்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த நாராயண பெருமாள், அவரது மனைவி செல்வி, மகள் ரம்யா ஆகியோர் சேர்ந்து முத்துகிருஷ்ணனின் மகன் அய்யாத்துரையை (25) கம்பால் தாக்கினர்.
இதுபோல அய்யத்துரை, அவரது தாயார் தங்கத்தாய் ஆகியோர் சேர்ந்து நாராயண பெருமாள், அவரது மனைவி செல்வி, மகள் ரதிஸ்ரீ ஆகியோரை செங்கலால் தாக்கினர்.
இதில் காயமடைந்த அய்யாத்துரை, நாராயண பெருமாள், அவரது மனைவி செல்வி, மகள் ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர். இதுபற்றி இரு தரப்பினரும் களக்காடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் அய்யாத்துரை அளித்த புகாரின் பேரில் நாராயண பெருமாள், அவரது மனைவி செல்வி, மகள் ரம்யா ஆகியோர் மீதும், நாராயணபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் அய்யத்துரை, அவரது தாயார் தங்கத்தாய் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






