search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மே மாத  மின் கட்டணத்தை செலுத்த வேண்டுகோள்
    X

    கோப்புபடம். 

    மே மாத மின் கட்டணத்தை செலுத்த வேண்டுகோள்

    • 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
    • ஜூலை 2022 மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.

    உடுமலை:

    உடுமலை ராகல்பாவி, மலையாண்டிபட்டணம், சுண்டக்காம்பாளையம் மின் நுகர்வோர் கடந்த மே மாத கட்டணத்தையே ஜூலை மாதத்திற்கும் செலுத்துமாறு, மின் வாரியம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து உடுமலை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அறம்வளர்த்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடுமலை மின் பகிர்மான வட்டம் உதவி மின் பொறியாளர் மேற்கு பிரிவுக்குட்பட்ட ராகல்பாவி, மலையாண்டிபட்டணம், சுண்டக்காம்பாளையம் பகிர்மான இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களினால் ஜூலை 2022 மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.எனவே மேற்படி பகிர்மான மின் நுகர்வோர்கள் மே 2022 மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே ஜூலை மாதத்திற்கான மின் கட்டண தொகையாக அறிவிப்பு செய்யப்பட்ட, 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×