search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- கலெக்டரிடம், எம்.எல்.ஏ. மனு
    X

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்த காட்சி.

    சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- கலெக்டரிடம், எம்.எல்.ஏ. மனு

    • சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தவும், தரமானதாகவும் அமைக்க வேண்டும்.
    • 3 கட்டுமான குழுக்களை கொண்டு ஒரே நேரத்தில் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    பாபநாசம்:

    கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-

    கும்பகோணம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சிதிலமடைந்து பொது போக்குவரத்துக்கு பெரும் சவாலாக இருந்து வந்த நிலையில் சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு இந்த சாலையில் தற்போது சீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.

    தஞ்சாவூரிலிருந்து தொடங்கப்பட்டுள்ள அந்த பணியானது ஒரேயொரு கட்டுமான குழுவைக் கொண்டு கும்பகோணம் நோக்கி மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றது.

    கடந்த சில வாரங்களாக பெய்துள்ள தொடர்மழை காரணமாக இந்த சாலை உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாலை சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தவும், தரமானதாகவும் அமைத்திட வேண்டும்.தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் ரவுண்டானாவிலிருந்து அய்யம்பேட்டை வரை ஒரு பகுதியாகவும். அய்யம்பேட்டை தொடங்கி பாபநாசம் உத்தாணி வரை ஒரு பகுதியாகவும், உத்தாணி முதல் தாராசுரம் புறவழிச்சாலை வரை ஒரு பகுதியாகவும் ஆக 3 பகுதியாக இந்த பணிகளை, 3 கட்டுமான குழுக்களை கொண்டு ஒரே நேரத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வேகமாக இந்த பணிகளை நிறைவு செய்ய முடியும்.

    இந்த நெடுஞ்சாலையில் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் கட்டுமானத்தின் போது, அய்யம்பேட்டை, பாபநாசம் பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி பொறியாளர்கள். பேரூராட்சி மன்றத் தலைவ ர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலும், பேரூராட்சி அல்லாத கிராமப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் பொறியாளர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றியக் குழு மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனைகளின் அடிப்படையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×