search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
    X

    கோவையில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

    • பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை
    • 50-க்கும் மேற்பட்டோர் பணம் வாங்கி ஏமாற்றிய பெண்கள் வீடு முன்பு திரண்டனர்.

    வடவள்ளி,

    கோவை சிறுவாணி சாலை ஆலாந்துறையில் இளம்பெண் ஒருவர் கண்கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடி வந்தார்.

    அந்த சமயம் மத்தவ ராயபுரத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகள்கள் இளம்பெண்ணுக்கு அறிமுகம் ஆனார்கள். 2 மகள்களில் ஒருவர் தான் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், உங்கள் கணவருக்கு வேலை வாங்கி தருகிறேன், அதற்கு பணம் செலவாகும் என கூறி இருக்கிறார்.

    அதை உண்மை என நம்பிய இளம்பெண் 3 தவணையாக ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் சொன்னபடி இளம்பெண்ணின் கணவருக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போதும் திருப்பிக் கொடுக்க வில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பெண், தனது உறவினர்களிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் தான் ஏமாற்றப்பட்ட விவரத்தை தெரிவித்தார்.

    இந்தநிலையில் இன்று இளம்பெண்ணின் தரப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பணம் வாங்கி ஏமாற்றிய பெண்கள் வீடு முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். அங்கு 2 தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். பணம் வாங்கிய தாய்- 2 மகள்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காத பட்சத்தில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×