search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்டத்தில் மழை நீடிப்பு பெத்தநாயக்கன்பாளையத்தில் 7 மில்லி மீட்டர் பதிவு
    X

    மாவட்டத்தில் மழை நீடிப்பு பெத்தநாயக்கன்பாளையத்தில் 7 மில்லி மீட்டர் பதிவு

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
    • அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக பெத்த நாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதி களில் தண்ணீர் தேங்கியது. கோடைகாலத்தில் பெய்த மழை, பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளை யத்தில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் - 6, கெங்கவல்லி - 5, வீரகனூர் - 4, தலைவாசல் - 4 என மாவட்டம் முழுவதும் 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×