என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா
- கஜா புயலுக்கு பின் லட்சக்கணக்கான மரங்களை அடியோடு சாய்த்தன.
- சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் மரங்கள், செடிகொடிகள் நிரைந்து காணப்பட்டது.
ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலுக்கு பின், முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் லட்சக்கணக்கான மரங்களை அடியோடு சாய்த்தன.
இதனை மீட்டெடுக்கும் வகையில், முத்துப்பேட்டை அடுத்த மேலத்தொண்டியக்காடு கிராமத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 75 மரக்கன்றுகள் அப்பகுதியில் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள், கிராம நிர்வாகிகள் மற்றும் மன்ற நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






