என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தஞ்சையில் இருந்து அரவைக்காக 2000 டன் நெல் அனுப்பிவைப்பு தஞ்சையில் இருந்து அரவைக்காக 2000 டன் நெல் அனுப்பிவைப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/02/09/1833636-16.webp)
லாரிகளில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
தஞ்சையில் இருந்து அரவைக்காக 2000 டன் நெல் அனுப்பிவைப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன
- நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.
இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
இந்தநிலையில் இன்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.அந்த நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.