search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சட்டவிழிப்புணர்வு முகாம்
    X

    சட்டவிழிப்புணர்வு முகாம்

    • சிவகங்கையில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், தன்னார்வ சட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் மத்திய சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், மாநில சட்ட பணிகள் ஆணைகுழு வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய் பிரியா வழிகாட்டுதலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் குடும்ப நல நீதிபதி முத்துகுமரன் தலைமையில் அனைத்து துறை சார்ந்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    இதில் அரசின் நலத்துறை செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி பரமேஸ்வரி ஏற்பாடு செய்திருந்தார். இதில் நீதித்துறை தலைமை குற்றவியல் நீதிபதி சுதாகர், நீதிதுறை நடுவர்கள் அனிதா கிறிஸ்டி, சத்தியநாராயணன், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், தன்னார்வ சட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×