search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாயர்புரம் அருகே சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலி
    X

    மின்சாரம் தாக்கி பலியான செல்லப்பாண்டி.

    சாயர்புரம் அருகே சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலி

    • செல்லப்பாண்டிக்கு விஜயா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
    • ஒரு மரத்தில் சீரியல் லைட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி செல்லப்பாண்டி கீழே விழுந்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள தங்கம்மாள் புரம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி விஜயா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    செல்லபாண்டி தங்கம்மாள் புரத்தில் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். நேற்று காலை 9 மணியளவில் அங்குள்ள ஒரு மரத்தில் சீரியல் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மெயின் லைனில் சீரியல் செட் உரசி மின்சாரம் தாக்கியதில் செல்லப்பாண்டி மரத்திலிருந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து இவரது மனைவி விஜயா சாயர்புரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×