என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாயர்புரம் அருகே சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலி
- செல்லப்பாண்டிக்கு விஜயா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
- ஒரு மரத்தில் சீரியல் லைட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி செல்லப்பாண்டி கீழே விழுந்தார்.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள தங்கம்மாள் புரம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி விஜயா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
செல்லபாண்டி தங்கம்மாள் புரத்தில் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். நேற்று காலை 9 மணியளவில் அங்குள்ள ஒரு மரத்தில் சீரியல் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மெயின் லைனில் சீரியல் செட் உரசி மின்சாரம் தாக்கியதில் செல்லப்பாண்டி மரத்திலிருந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து இவரது மனைவி விஜயா சாயர்புரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்