என் மலர்
உள்ளூர் செய்திகள்

செகந்தராபாத்தில் இருந்து கோட்டயத்திற்கு கோவை வழியாக சிறப்பு ரெயில்
- நாகர்கோவில் கோவை ெரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.
- கேரள மாநிலம் கோட்டயம் இடையே சிறப்பு ெரயில் இயக்கப்படுவதாக ெரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை,
சபரிமலை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவை வழித்தடத்தில் செகந்தராபாத் - கேரள மாநிலம் கோட்டயம் இடையே சிறப்பு ெரயில் இயக்கப்படுவதாக ெரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செகந்தராபாத்தில் இருந்து நவம்பா் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.50 மணிக்குப் புறப்படும் செகந்தராபாத் - கோட்டயம் சிறப்பு ெரயில் ( எண்:07125) மறுநாள் இரவு 9 மணிக்கு கோட்டயம் நிலையத்தைச் சென்றடையும்.
இதேபோன்று நவம்பா் 28-ந் தேதி (திங்கள்கிழமை) இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்படும் கோட்டயம் - செகந்தராபாத் சிறப்பு ெரயில் ( எண்:07126) 30-ந் தேதி காலை 4 மணிக்கு செகந்தராபாத் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ெரயிலானது எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், சிராலா, தெனாலி, குண்டூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயிலானது செகந்தராபாத்தில் இருந்து கோவைக்கு மதியம் 3.07 மணிக்கு வந்து 3.10-க்கு புறப்பட்டு செல்லும். கோட்டயத்தில் இருந்து கோவைக்கு காலை 4.37-க்கு வந்து 4.40 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
பிகார் மாநிலம் தா்பங்காவில் இருந்து நவம்பா் 21-ந் தேதி முதல் ஜனவரி 12-ந் தேதி வரை திங்கள்கிழமைகளில் இரவு 9.15 மணிக்குப் புறப்படும் தா்பங்கா - எா்ணாகுளம் வாராந்திர ெரயில் (எண்: 05555) வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.
எா்ணாகுளத்தில் இருந்து நவம்பா் 24-ந் தேதி முதல் டிசம்பா் 15-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் இரவு 9 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - தா்பாங்கா வாராந்திர ெரயில் (எண்: 05556) ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு தா்பங்காவைச் சென்றடையும்.
இந்த ெரயிலானது, திருச்சூா், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், விஜயவாடா, ராஜமுந்திரி, சம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, தன்பாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயிலானது தா்பங்காவில் இருந்து கோவைக்கு இரவு 12.40 மணிக்கு வந்து 12.45-க்கு புறப்பட்டு செல்லும். எா்ணாகுளத்தில் இருந்து கோவைக்கு காலை 12.50-க்கு வந்து 12.55 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
திருப்பூர்-வஞ்சிப்பாளை யம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாகர்கோவில் - கோவை ெரயில் (எண்: 16321) நாளை 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.






