search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி கோவை உக்கடத்தில் நடந்தது.
    • பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.

    கோவை,

    பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி கோவை உக்கடத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் பாசிச எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார். இதில் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், அந்த இடத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ராமர் கோவில் கட்டப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக மத்திய அரசை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாட்டிலுள்ள மதசார்பற்ற அரசுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அந்த இடத்தை மீட்டு தர குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.

    Next Story
    ×