search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் மாணவர்கள் போராட்டம்- 21 பேர் கைது
    X

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் மாணவர்கள் போராட்டம்- 21 பேர் கைது

    • பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
    • மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .

    தஞ்சாவூா்:

    நீட் நுழைவு தேர்வு முடிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக கூறி பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

    அந்த வகையில் இன்று நீட் தேர்வை கண்டித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள மத்திய அரசின் கலால் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜுன் தலைமையில் ஏராளமான மாணவ- மாணவிகள் திரண்டனர்.

    பின்னர் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பியவாறு கலால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.

    உடனே பாதுகாப்பில் இருந்த போலீசார் பேரிகார்டு கொண்டு மாணவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 21 மாணவ-மாணவிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×