search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்
    X

    கோத்தகிரியில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்

    கோத்தகிரியில் வெளிநாட்டு தாவரங்களும் நன்றாக வளருவதற்கு உகந்த குளுகுளு காலநிலை நிலவுகிறது.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு தாவரங்களும் நன்றாக வளருவதற்கு உகந்த குளுகுளு காலநிலை நிலவுகிறது. இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள பாண்டியன் பார்க் பகுதியில் சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

    மஞ்சள் வண்ணத்தில் வசீகரிக்கும் மலர்கள், காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் அமைந்து உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி மலர்களுக்கு மத்தியில் நின்று, குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    Next Story
    ×