search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கிரிக்கெட் விளையாடியபோது மூச்சுத் திணறல்: மயங்கி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
    X

    கிரிக்கெட் விளையாடியபோது மூச்சுத் திணறல்: மயங்கி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

    • பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்தவர் மனோஜ் குமார்.
    • கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பொன்னேரி:

    பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்தவர் மனோஜ் குமார்(36) எம்பிஏ, பிஎச்டி படித்த இவர் சென்னை வேர் ஹவுஸ்ல் வேலை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொன்னேரி அடுத்த கம்மார் பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி கொண்டு இருந்தார். அப்போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை நண்பர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொன்னேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×