என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது
- கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்.
தஞ்சாவூர்:
தஞ்சை வண்டிப்பேட்டை பகுதியில் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட போலீசார் உடனே அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த அபிஷேக் (வயது 20 ) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபிஷேக்கை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story






