search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வெளிநாட்டில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்- கலெக்டரிடம், உறவினர்கள் மனு
    X

    கலெக்டரிடம் மனு அளிக்க வந்த உறவினர்கள்.

    வெளிநாட்டில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்- கலெக்டரிடம், உறவினர்கள் மனு

    • 9 வருடங்களாக சவுதி அரேபியாவில் டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • கடந்த 23-ம் தேதி நடந்த சாலை விபத்தில் அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் சித்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 51). இவரது மனைவி கோமதி (40). இவருக்கு லட்சுமி, ஷாலினி, சிவானி என்கிற மூன்று மகள்கள் உள்ளனர்.

    செந்தில்குமார் கடந்த 2013 ஆண்டு முதல் 9 வருடங்களாக சவுதி அரேபியாவில் டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி அங்கு சாலை விபத்தில் செந்தில்குமார் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இறந்த செந்தில்குமாரின் மனைவி உடல்நிலை பாதி க்கப்பட்டு இருப்பதாலும், அவருக்கு மூன்று பெண் குழந்தைகளாக இருப்பதாலும் அவரது உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    செந்தில்குமாரின் மனைவி கையெழுத்திட்ட மனுவை உறவினர் நவநீதகி ருஷ்ணன், சேமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு உள்ளிட்டோர் திருவாரூர் மாவட்ட கலெக்ட ரிடம் அளித்தனர்.மனுவை பெற்றுக்கொ ண்ட மாவட்ட கலெக்டர் உரிய நடவ டிக்கைகள் மேற்கொள்வ தாக தெரிவித்தார்.

    Next Story
    ×