search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • தண்டாளம் வடிகால் வாய்க்கால் 3 ஆயிரம் மீட்டர் வரை உள்ளது.
    • இந்த வாய்க்காலின் படுக்கை தளம் 3 மீட்டர் ஆகும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகை வடிகால் வாய்க்கால் மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நீர்வளத்துறை காவிரி வடிநில உட்கோட்டம் நன்னிலம் கட்டுப்பாட்டில் உள்ள பாசன பிரிவு எண் 1 திருமருகல் பராமரிப்பில் இருந்து வரும் திருமலைராஜன் ஆறு, முடிகொண்டன் ஆறு,நரிமணியாறு,ஆறுகள் மற்றும் ஆறுகளில் கலக்கும் வடிகால்கள் பாசன பிரிவு எண்-1 திருமருகல் பராமரிப்பில் இருந்து வருகிறது. தென்பிடாகை வடிகால் வாய்க்கால் 3000 மீட்டர் வரை மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் 3000 மீட்டர் வரை உள்ளது. கிராமத்தில் இவ்வடிகால் வாய்க்காலின் மூலம் தென்பி டாகை,தண்டா ளம் கிராமத்தில் 471 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன பெறுகின்றது.

    இவ்வாய்கா லின் படுக்கை தளம் 3 மீட்டர் ஆகும். தற்போது வடிகால் வாய்க்காலில் வண்டல் படிந்து காட்டாமணக்கு செடிகள் மண்டி,நீர் போக்கினை வெகுவாக தடுத்து விடுவதால் வெள்ள காலங்களில் வாய்க்காலில் வெள்ள நீர் வடியாமல் தேங்குவதால் கரைகள் பாதிக்கப்பட்டு கரை உடைப்பு மற்றும் கரைப்பொழிவுகள் ஏற்பட்டு, பெரும் சேதத்தை விளைவிக்கிறது.

    எனவே தென்பிடாகை வடிகால் வாய்க்கால் மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படு கிறது. இந்த பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், உதவி செயற்பொறியாளர் செங்கல்வராயன்,திருமருகல் உதவி பொறியாளர்கள் சரவணன்,செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×