என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவாரூரில் தி.க. தலைவர் வீரமணி பேட்டி அளித்தார்.
கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- தி.க. தலைவர் வீரமணி பேட்டி
- திராவிட மாடல் விளக்க திறந்தவெளி மாநாடானது அடுத்த மாதம் 4-ந்தேதி திருவாரூரில் நடைபெறும்.
- இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூரில் திராவிட கழகம் சார்பில் சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க திறந்தவெளி மாநாடு நேற்று நடைபெறுவதாக இருந்தது.
இதில் தி.க.தலைவர் வீரமணி, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உட்பட தி.மு.க கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு பேசுவதற்காக திருவாரூர் வந்தடைந்தனர்.
ஆனால் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நேரத்தில் திருவாரூரில் தொடர் மழை பெய்தது.
இதையடுத்து கூட்டம் செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தி.க. தலைவர் வீரமணி செய்தியா ளர்களிடம் பேசும்போது கூறியதாவது,
மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க திறந்தவெளி மாநாடானது அடுத்த மாதம் 4ந்தேதி திருவாரூரில் நடைபெறும்.
இதில் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். தமிழக கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
இந்த தீர்ப்பை எதிர்த்தும் உச்சநீதிமன்ற செல்ல வாய்ப்புள்ளது. அந்த தடையையும் தகர்த்தெறிவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






