என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூலி தொழிலாளி வெட்டி ெகாலை
- சுபேந்திரன் மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்தார்.
- படுகாயமடைந்த சுபேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் கூலிதொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலத்திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி ( வயது 41) விவசாயி. இவரது வீட்டில் அதே பகுதி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுபேந்திரன் ( வயது 39) என்பவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக விவசாய கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சுபேந்திரன் மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்ததால் அவர் சுபேந்திரனை வேலைவிட்டு நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுபேந்திரன் அடிக்கடி மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி அரிவாளால் சுபேந்திரனை வெட்டினார். அதில் படுகாயம் அடைந்த சுபேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பரவக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சக்கரவர்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
வெட்டி கொலை செய்யப்பட்ட சுபேந்திரனுக்கு கவிதா என்ற மனைவியும், 1 ஆண் ,2 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடதக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்