search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளிப்பதை வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளி
    X

    குளிப்பதை வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளி

    • நாகராஜ் சிறுமி குளிப்பதை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார்.
    • சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பண்ருட்டி, அக்.28-

    பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு பல்லவ ராயநத்தம் முருக ன்கோயி ல்தெருவைச்சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24), கூலி தொழிலாளி திருமணமா காதவர். அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டில் தனியாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகராஜ் சிறுமி குளிப்பதை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார். இதனையடுத்து இந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி அவரை மிரட்டி பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி உடல் பாதிக்கப்பட்டார்.

    இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து சிறுமியை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நாகராஜனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×