என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மளிகை வியாபாரி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
- தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் பகுதியில் கடந்த 2 -ந்தேதி வியாபாரம் செய்ய கோவை, பழனி, தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார்.
- வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது 12 பவுன் எடை கொண்ட ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டு இருந்தது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 37). இவர் சொந்தமாக டெம்போ வைத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் விஜயன், தனது அம்மா பானுமதி, தம்பி பிரகாஷ் ஆகியோருடன் கடந்த 2 -ந்தேதி வியாபாரம் செய்ய கோவை, பழனி, தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். படுக்கை அறையில் உள்ள பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த பானுமதியின் தாலிக்கொடி மற்றும் செயின், பிரகாஷின் செயின் உட்பட சுமார் 12 பவுன் எடை கொண்ட ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டு இருந்தது.
இது குறித்து விஜயன் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்