search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்மலை சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
    X

    பொன்மலை சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

    • 8 மணிக்கு சுமங்கலி மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சியும், பந்தல் கால் நடும் நிகழ்ச்சியும் நடந்தது.
    • சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகில் உள்ள பொன்மலை சீனிவாச பெருமாள் கோவிலில் இரண்டாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு சுமங்கலி மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சியும், பந்தல் கால் நடும் நிகழ்ச்சியும் நடந்தது. 1-ந் தேதி இரவு கோ பூஜை, வாஸ்து சாந்தி ஹோமம் ஆகியவை நடந்தன.

    நேற்று காலை 9 மணிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றன. தொடர்ந்து 10.15 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், சாமிக்கு ரக்ஷாபந்தனம், தாயாருக்கு கவுரி பூஜை, சாமிக்கு காசி யாத்திரை, வரபூஜை, மாங்கல்ய தாரணம், மகா தீபாராதனையுடன் திருக்கல்யாணம் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் கல்யாண சீனிவாச பெருமாள் அருள் பாலித்தார்.

    மதியம் திருக்கல்யாண விருந்தும், மாலை 4 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், மாலை 6 மணிக்கு தாயார் சமேத சாமி கோவில் திருசுற்று பல்லக்கு சேவையும், பிரசாத வினியோகமும் நடைபெற்றன. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×