search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாம்பவர்வடகரை பேரூராட்சியில் முப்பெரும் விழா
    X

    சாம்பவர்வடகரை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்த படம்.

    சாம்பவர்வடகரை பேரூராட்சியில் முப்பெரும் விழா

    • முப்பெரும் விழாவிற்கு பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து தலைமை தாங்கினார்.
    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தனுஷ் குமார் எம்.பி. ஆகியோர் பேட்டரி வண்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை பேரூராட்சியில் புதிய பேட்டரி வாகனம் வழங்கல், நலத்திட்ட உதவிகள், தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து தலைமை தாங்கினார்.

    செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன், செயல் அலுவலர் காயத்ரி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நாலாயிரம் என்ற பாப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாம்பவர் வடகரை பேரூர் கழகச் செயலாளர் முத்து வரவேற்றார்.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தனுஷ் குமார் எம்.பி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பேட்டரி வண்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளும், தூய்மை பணியாளர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, செங்கோட்டை நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன், உதயநிதி நற்பணி மன்ற துணைச் செயலாளர் சிவா அருணன், செங்கோட்டை யூனியன் சேர்மன் திருமலைச்செல்வி, துணை சேர்மன் கால, அரசு ஒப்பந்தக்காரர் கரையாலூர் சண்முகவேல், சாம்பவர் வடகரை பேரூராட்சி கவுன்சிலர்கள் பழனிக்குமார், இசக்கி, மெர்சி சுந்தர், அய்யப்பன், தேவி, சுடலைமுத்து, முத்துலட்சுமி,

    அய்யப்பன், விஜய லட்சுமி, ராமலட்சுமி, ரபிக் ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகவேல், விஜயகுமார், ராமச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதிகள் செல்வின் அப்பாதுரை, ஆறுமுகம், முத்துக்குமார், சந்திரன், அருணா, அம்ஜத், சுப்ரமணி யன், அனந்த பெருமாள், முக்கையா, உதயசூரியன், ரமேஷ், காதர் மைதீன், காசி, ஒன்றிய கவுன்சிலர் வீராணம் ஷேக் முகமது, சாமிதேவர், பாலமுருகன், பசுபதி, பாலு, முத்துவேல், கருப்பண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி பொறியாளர் கோபி நன்றி கூறினார்.

    Next Story
    ×