search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெங்களூரில் திருடிய பைக் ஜி.பி. எஸ். கருவி மூலம் ஆம்பூரில் மீட்பு
    X

    பெங்களூரில் திருடிய பைக் ஜி.பி. எஸ். கருவி மூலம் ஆம்பூரில் மீட்பு

    • உரிமையாளரே பின்தொடர்ந்து வந்து பிடித்தார்
    • உரிமையாளரே பின்தொடர்ந்து வந்து பிடித்தார்

    ஆம்பூர், பிப்.8-

    தஞ்சாவூர் மாவட்டம் எடையம் பாளையம் பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் ஜெய பெருமாள் வயது (23) பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மின் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஜெயபெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் தங்கி உள்ள வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

    நேற்று அதிகாலை ஜெயகாந்தனின் பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பைக்கில் பொருத்திருந்த ஜிபிஎஸ் கருவியில் இருந்து ஜெயபெருமாள் செல்போனில் குறுஞ்செய்தி வந்தது. விழித்துக் கொண்ட ஜெயகாந்தன் மற்றும் அவரது நண்பர்கள் பைக் செல்லும் பாதையை காரில் பின் தொடர்ந்து வந்தனர்.

    கர்நாடகாவை கடந்து சென்னை தேசிய நெடுங்சாலைக்கு வந்தனர்.

    அப்போது ஜெய பெருமாளின் பைக் வாகனம் நீண்ட நேரமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள காட்டு கொல்லை என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக ஜிபிஎஸ் கருவி காட்டி கொடுத்தது.

    இதனைத் தொடர்ந்து ஆம்பூர் பகுதியை சேர்ந்த நண்பர்களின் உதவியுடன் காட்டுக் கொல்லை பகுதிக்கு விரைந்த ஜெயபெருமாள் அங்கு பைக்குடன் நின்று கொண்டி ருந்த கொள்ளையர்கள் 5 பேரை கையும் களவுமாக பிடித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை உரிமை யாளரே ஜிபிஆர்எஸ் வசதியுடன் பின்தொ டர்ந்து வந்து கண்டறிந்து கொள்ளையர்களை பிடித்துக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×