என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பல்லடம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
- இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
- ரொக்கம் ரூ. 5,340 பறிமுதல் செய்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரடிவாவி குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட, கரடிவாவியைச் சேர்ந்த ரவி (30),கார்த்தி (36),ஸ்ரீதர் (24), அம்மாசை (24), வடிவேல் (34) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ. 5,340 பறிமுதல் செய்தனர்.
Next Story






