search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே சரக்கு வேனில் கடத்திய 650 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - டிரைவர் கைது
    X

    கைதான டிரைவர்.

    பல்லடம் அருகே சரக்கு வேனில் கடத்திய 650 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - டிரைவர் கைது

    • சரக்கு வேனை பல்லட ம்போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
    • ஓட்டுநர் அனந்த நாராயணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை நால்ரோடு பகுதியில் பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமை யிலான போலீ சார்,வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சிறிய ரக சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் அரசால் தடை செய்யப்பட்ட 650 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த சரக்கு வேனை பல்லட ம்போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து,விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதில் வந்தவர் கோவை கணபதியை சேர்ந்தஅனந்த நாராயணன் (வயது 52) என்பதும், கோவையிலிருந்து புகையிலை பொருட்களை கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் ஓட்டுநர் அனந்த நாராயணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×