search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் எம்.எல்.ஏ. ஆய்வு - பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
    X

    க.செல்வராஜ் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த காட்சி. 

    திருப்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் எம்.எல்.ஏ. ஆய்வு - பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

    • பொதுமக்களிடம் பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்டார்.
    • குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பொதுமக்களிடம் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வ ராஜ் எம்.எல்.ஏ., இன்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்டார்.அப்போது பொதுமக்கள் 43 ம் நம்பர் அரசு பேருந்து இந்த வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்பட வேண்டும்.

    மேலும் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். தெருவிளக்கு அமைத்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் கோரிக்கை மனுவாக வழங்கினர். கவுன்சிலர்கள் ராதா கிருஷ்ணன்,வேலம்மாள், காந்தி,நெருப்பெரிச்சல் பாலன்,வார்டு செயலாளர் பாபுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×