search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில்  தியாகிகள் ஜோதி பயண குழுவிற்கு வரவேற்பு
    X
    தியாகிகள் ஜோதி பயண குழுவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி

    பல்லடத்தில் தியாகிகள் ஜோதி பயண குழுவிற்கு வரவேற்பு

    • மாநாட்டிற்காக நாகை மாவட்டம் கீழ் வெண்மணியில் இருந்து வெண்மணி தியாகிகள் ஜோதி பயண குழு தமிழகம் முழுவதும் பயணம் செல்கிறது.
    • பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    கேரளாவில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 -வது மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக நாகை மாவட்டம் கீழ் வெண்மணியில் இருந்து வெண்மணி தியாகிகள் ஜோதி பயண குழு தமிழகம் முழுவதும் பயணம் செல்கிறது. இந்த நிலையில் பல்லடம் வந்த தியாகிகள் ஜோதி பயண குழுவிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்,பல்லடம் கடைவீதியில் வரவேற்பளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாயிகள் சங்க நிதிச் செயலாளர் கிருஷ்ண பிரசாத், மாநில பொருளாளர் பெருமாள், மாநில துணைத்தலைவர் டில்லி பாபு, திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார், பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×