என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் கடத்தி வந்து திருப்பூர் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை; 2 பேர் கைது - 7 கிலோ பறிமுதல்
    X

    கோப்புபடம். 

    ரெயிலில் கடத்தி வந்து திருப்பூர் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை; 2 பேர் கைது - 7 கிலோ பறிமுதல்

    • இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • இருவரையும் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காந்திநகர் ஏபி., நகரில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்வதாக அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வட மாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் தங்கி இருந்த வீட்டில் 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் பாரிக் (24), மனோஜ் பொகாரா (36) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்திய போது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரெயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து சப்ளை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×