search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துளிகள் அமைப்பு சார்பில் 116-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா
    X

     துளிகள் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்ட காட்சி.

    துளிகள் அமைப்பு சார்பில் 116-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா

    துளிகள் அமைப்பு சார்பில் இதுவரை 20,850 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 116-வது கட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி காங்கயம் சங்கரண்டாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர் செல்வி, டி.இ.ஓ., பக்தவச்சலம், சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் தனலட்சுமி, இளைய பட்டக்காரர்கள் எஸ்.கே.கணேஷ், நரேந்திரன், கனரா வங்கி மேலாளர் சதீஷ்குமார், கால்நடை மருத்துவர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தனர்.

    சங்கரண்டாம்பாளையம் தென்கரை நாடு மும்முடி பட்டம் பட்டக்காரர் பாலசுப்பிரமணிய பெரியண்ண வேணாவுடையார் மற்றும்சிறுகிணர் கிராமபசுமை குழு மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். துளிகள் அமைப்பு சார்பில் இதுவரை 20,850 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    Next Story
    ×