என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
செங்கப்பள்ளி, பல்லடத்தில் நாளை மின்தடை
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினி–யோ–கம் இருக்–காது.
- துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அவினாசி:
அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கப்பள்ளி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட செங்கப்பள்ளி, ஜோதி நகர், சரவணாபுரம், கே.பி.ஆர். மில் பகுதி, பியூர்டிராப் கம்பெனி பகுதி, கருடா நகர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் பல்லடம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.






