என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அவினாசி அருகே மழைநீரை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்
- பனியன் கம்பெனி தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
- அரசு பஸ், கார், லாரி ஆகிய வாகனங்கள் செல்கின்றன.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி தேவம்பாளையம் முதல் குளத்துப்பாளையம் வழியாக அணைப்புதூர் வரை செல்லும் பாதை உள்ளது. இந்தப் பாதையில் தினசரி பனியன் கம்பெனி தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் அரசு பஸ், கார், லாரி ஆகிய வாகனங்கள் செல்கின்றன. இதனால் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக குளத்துப் பாளையம் பெரிய தோட்டம் பகுதி அருகில் ரோட்டில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களும் சிரமத்திற்குள்ளாகினர்.
எனவே அப்பகுதி மக்கள் பள்ளமான அந்த ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் மேம்படுத்த வேண்டும் என்று கூறி ரோட்டில் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஊராட்சி தலைவர் கோமதி, துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் சண்முகம், கவுரீஸ்வரி, தங்கபாண்டி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேசன், வருவாய்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் அந்த ரோட்டில் மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்