search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    எஸ்.வி.,புரம் - பெருமாள்புதூர் மின் இணைப்புகளுக்கு ஜனவரி மாத மின்கட்டணத்தை செலுத்த வேண்டுகோள்
    X

    கோப்புபடம்.

    எஸ்.வி.,புரம் - பெருமாள்புதூர் மின் இணைப்புகளுக்கு ஜனவரி மாத மின்கட்டணத்தை செலுத்த வேண்டுகோள்

    • 1,600 மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால் மின் கணக்கீடு மேற்கொள்ளவில்லை.
    • ஜனவரி மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே மார்ச் மாதத்திற்கும் செலுத்த வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை எஸ்.வி., புரம் மற்றும் கொமரலிங்கம் பெருமாள் புதூர் மின் இணைப்புகளுக்கு நடப்பு மாத மின் கணக்கீடு செய்யாததால் ஜனவரி மாத தொகையை செலுத்துமாறு மின் வாரியம் அறிவித்துள்ளது.

    இது குறித்து உடுமலை கோட்ட செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டம், கிராமம் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, எஸ்.வி., புரம் பகிர்மான மின் இணைப்புகளில் சுமார் 1,600 மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால் 2023 மார்ச் மாதத்திற்கான மின் கணக்கீடு மேற்கொள்ளவில்லை.ஆகவே எஸ்.வி., புரம் மின் பகிர்மான நுகர்வோர் ஜனவரி மாதம் செலுத்திய தொகையையே, மார்ச் மாதத்திற்கும் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.கொமரலிங்கம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, பெருமாள் புதூர் பகிர்மான மின் இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களினால் மார்ச் 2023 மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.ஆகவே பெருமாள்புதூர் பகிர்மான மின் நுகர்வோர், கடந்த ஜனவரி மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே மார்ச் மாதத்திற்கும் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×