என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • பெரணமல்லூர் பகுதியில் நடந்தது
    • பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது

    சேத்துப்பட்டு:

    பெரணமலூர் ஊராட்சி ஒன்றியம் கெங்காபுரம், கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய சிமெண்டு, சாலை மற்றும் கல்வெர்ட் அமைக்கும் பணி, பெரிய கொழப்பலூர், கிராமத்தில் பொது நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பள்ளி சீரமைப்பு பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் 21-22-ம் ஆண்டிற்கான ரூ.11 லட்ச மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

    பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், பெரிய கொழப்லூர், கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சந்திரம்பாடி, கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் கால்நடை துறை பராமரிப்பு சார்பில் தீவன வளர்ப்புகள், குளம் அமைத்தல், அரியபாடி, கிராமத்தில் இருளர் இன மக்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் வீதம் எட்டு பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளின் தன்மை, மற்றும் பணி நிலவரம், குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பெரிய கொழப்பலூர் கிராமத்தில் ஆவின் போதுஅரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அப்போது அங்கு சிறப்பு வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவிகளிடம் நன்றாக படித்து வாழ்வில் நல்ல நிலைக்கு நீங்கள் வரவேண்டும். படிப்பில் கவனம் செலுத்துங்கள். என்று கூறினார்.

    Next Story
    ×