search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொளத்தூரில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந்தேதி ஆருத்ரா தரிசனம்
    X

    கொளத்தூரில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந்தேதி ஆருத்ரா தரிசனம்

    • அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
    • கோவில் நிர்வாகிகள் தகவல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

    இதைமுன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, 5 மணியளவில் 5½ அடி உயர ஸ்ரீநடராஜருக்கு அபிஷேகம், ஆராதனையும், காலை 7 மணியளவில் கோபுர தரிசனமும், பின்னர் பக்தர்களுக்கு ஆருத்ரா தீப மை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

    மாலை 6 மணியளவில் ஸ்ரீநடராஜர் சிவகாமசுந்தரி அம்மனுடன், 63 நாயன்மார்கள், சந்தான குறவர்கள் தனித்தனியே சப்பரத்தில் வீதி உலா சிவகான பேரிகை முழங்க நடைபெறும் என கோவில் விழாக்குழு நிர்வாகிகள் கூறினர்.

    Next Story
    ×