என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க எல்லைக்கோடு கயிறுகட்டிய போக்குவரத்து போலீசார்.
பழனியில் கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அதிரடி
- பழனி நகரில் அடிவாரம், கிரிவீதி, ஆர்.எப்.ரோடு உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் நெரிசலான பகுதியாக உள்ளது.
- கயிறு கட்டிய இடத்தை கடந்து வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
பழனி:
பழனி நகரில் அடிவாரம், கிரிவீதி, ஆர்.எப்.ரோடு உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் நெரிசலான பகுதியாக உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவ தால் மாலைநேரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
ஜவுளி கடைகள் அதிகம் உள்ள ஆர்.எப். ரோடு பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலை யோர ஆக்கிரமிப்புகளும் அதிக அளவில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆர்.எப். ரோடு பகுதியில் வாகனங்கள் நிறுத்த கயிறு கட்டி இடம் கொடுக்க ப்பட்டது. அந்த இடத்தை கடந்து வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை கடந்து ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது.
தீபாவளி பண்டிகை வரை பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூரின்றி வியாபாரிகள் வியாபாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.






