search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாப பலி
    X

    பண்ருட்டியில் பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாப பலி

    • காளியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஆ.நத்தம் கிராமத்தை சேர்ந்தவர்சண்முகம் (52). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயம் அடைந்த இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்சி கிச்சை பலனிக்காமல் இன்று பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார் சப்.இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×