என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு சிற்பங்கள் குறித்த பயிற்சி வகுப்பு
Byமாலை மலர்23 Nov 2022 3:11 PM IST
- உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சி யகத்தில் காயிதே மில்லத் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிற்பங்களை அறிவோம் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
- பல்லவர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், நாயக்கர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், சோழர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது
நெல்லை:
உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சி யகத்தில் காயிதே மில்லத் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிற்பங்களை அறிவோம் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர்
சிவ.சத்திய வள்ளி கலந்து கொண்டு சிற்பங்களை பார்த்து அவை என்ன சிற்பங்கள் என்பது கண்டுபிடிப்பது தொடர்பான பயிற்சி வகுப்பினை மாணவ, மாணவிகளுக்கு நடத்தினார். மேலும் பல்லவர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், நாயக்கர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், சோழர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நடுகற்கள், சதிக்கற்கள் பற்றியும் விரிவான விளக்கத்தினை அளித்தார். பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X