என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூச்சொரிதல் விழாவுக்கு வசூலித்த பணத்தை பிரிப்பதில் மோதல்; 3 பேருக்கு அரிவாள் வெட்டு
    X

    பூச்சொரிதல் விழாவுக்கு வசூலித்த பணத்தை பிரிப்பதில் மோதல்; 3 பேருக்கு அரிவாள் வெட்டு

    • பூச்சொரிதல் விழாவுக்கு வசூலித்த பணத்தை பிரிப்பதில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவுக்கு ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தனர்

    திருச்சி:

    சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவுக்கு ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தனர். பின்னர் அந்தப் பணத்தை பிரிப்பதில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடும், தகராறும் ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து திருச்சி அம்மா மண்டபம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த கொக்கரக்கோ என்கிற பிரசாந்த் (வயது 21) மற்றும் அவரது நண்பர்கள் ஹரி, விஜய், அசோக்,வெங்கடேசன் ஆகியோர் பணத்தை தர மறுத்தனர்.

    பின்னர் அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஸ்ரீரங்கம் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (23), அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் (23), ரெக்ஸ் என்கிற ரெட்டி ஆகிய 3 பேரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ராஜேஷுக்கு இடது கையிலும், மாதவனுக்கு தலையிலும், ரெக்ஸ் என்கிற ரெட்டிக்கு தோள்பட்டையிலும் வெட்டு விழுந்தது.இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    Next Story
    ×