search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆளும் பல்லாக்கில் எழுந்தருளியரெங்கநாதர்
    X

    ஆளும் பல்லாக்கில் எழுந்தருளியரெங்கநாதர்

    • வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்
    • தைத்தேர்விழா நிறைவு

    திருச்சி,

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைத்தேரோட்ட உற்சவத்தையொட்டி தினமும் காலையும், மாலையும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி உத்திரவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தைத் தேர் உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தைத் தேரோட்டம் கடந்த 3-ந் தேதி நடைபெற்றது. உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று முன்தினம் சப்தாவரணம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளினர். இதையொட்டி மாலை 3 மணிக்கு நம் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ரெங்க விலாச மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு புறப்பட்டு வாகன மண்டபம் சென்றடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து ஆளும் பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள் உத்திரவீதிகளில் வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் பெருமாளை சேவித்தனர். பின்னர் வாகன மண்டபம் வந்தடை அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் தைத் தேர் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×